இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்..
குடும்பத்துடம் சொர்க்கம் செல்வோரும் நரகம் செல்வோரும்.. பகுதி - 2 உலக உபகாரங்கள் மட்டுமே குடும்ப பொறுப்பாளர்களின் கடமையல்ல.. அதையும் தாண்டி மிக முக்கியமான பொறுப்புகளை இஸ்லாம் சுமத்தியுள்ளது. அது குறித்து மறுமையில் விசாரிக்கபடுவோம். அந்த பொறுப்புகளில் கவனமாற்று இருப்பவர்கள் குடும்பத்துடன் நரகம் நுழைவார்கள் என்பது பற்றிய அல்குர்ஆன் கூறும் எச்சரிக்கைகளை கடந்த பதிவில் பார்த்தோம். அந்த பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி குடும்பத்துடன் சொர்க்கம் செல்லும் *இனிய இஸ்லாமிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?? இதற்கு இப்றாஹிம் அலை அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மிகச் சிறந்த முன்மாதிரி ஆவார்கள். இறைக்கட்டளை பிரகாரம் வேளாண்மையில்லாத பூமியில் தமது மனைவி ஹாஜர் (அலை) மற்றும் பாலகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை கொண்டுசென்று இப்றாஹீம் நபி அவர்கள் விட்டபோது “ இறைவன் தான் இப்படி கட்டளையிட்டானா?” என அன்னை ஹாஜர் அவர்கள் கேட்டார்கள். ஆமாம் என பதில் வந்தவுடன் ” அப்படியென்றால் இறைவன் என்னை கைவிட மாட்டான்” என விட்ட இடத்திலேயே சென்று அமர்ந்து கொண்டார்கள், (பார்க்க புகாரி: 3364) அதே போல இறை...