Posts

இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்..

Image
குடும்பத்துடம் சொர்க்கம் செல்வோரும் நரகம் செல்வோரும்.. பகுதி - 2 உலக உபகாரங்கள் மட்டுமே குடும்ப பொறுப்பாளர்களின் கடமையல்ல.. அதையும் தாண்டி மிக முக்கியமான பொறுப்புகளை இஸ்லாம் சுமத்தியுள்ளது. அது குறித்து மறுமையில் விசாரிக்கபடுவோம். அந்த பொறுப்புகளில் கவனமாற்று இருப்பவர்கள் குடும்பத்துடன் நரகம் நுழைவார்கள் என்பது பற்றிய அல்குர்ஆன் கூறும் எச்சரிக்கைகளை கடந்த பதிவில் பார்த்தோம். அந்த பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி குடும்பத்துடன் சொர்க்கம் செல்லும்  *இனிய இஸ்லாமிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?? இதற்கு இப்றாஹிம் அலை அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மிகச் சிறந்த முன்மாதிரி ஆவார்கள். இறைக்கட்டளை பிரகாரம் வேளாண்மையில்லாத பூமியில் தமது மனைவி ஹாஜர் (அலை) மற்றும் பாலகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை கொண்டுசென்று இப்றாஹீம் நபி அவர்கள் விட்டபோது “ இறைவன் தான் இப்படி கட்டளையிட்டானா?” என அன்னை ஹாஜர் அவர்கள் கேட்டார்கள். ஆமாம் என பதில் வந்தவுடன் ” அப்படியென்றால் இறைவன் என்னை கைவிட மாட்டான்”  என விட்ட இடத்திலேயே சென்று அமர்ந்து கொண்டார்கள், (பார்க்க புகாரி: 3364) அதே போல இறை...

இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்

Image
குடும்பத்துடன் சொர்க்கம் செல்வோரும், நரகம் செல்வோரும்.. وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ⭘ فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا⭘  யாருடைய ஏடு அவனது முதுகுக்குப் பின்புறமாக வழங்கப்படுகிறதோ, அவன் அழிவை வேண்டுவான். وَيَصْلَىٰ سَعِيرًا⭘ அவன் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவான். إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا⭘  அவன், தனது குடும்பத்தாருடன் (உலகில்) மகிழ்ச்சியாக இருந்தான். إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ⭘  (இறைவனிடம்) அவன் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டான். بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا⭘  அவ்வாறல்ல! அவனுடைய இறைவன், அவனைப் பார்ப்பவனாக இருந்தான். அல்குர்ஆன் -   84 : 10 - 15 📌 சிலரின் ஏடுகள் முதுகுக்கு பின்னாலிருந்து கொடுக்கப்பட்டு நரகில் எறியப்படுவதற்கு காரணம், அவர்கள் பூமியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது குற்றமா என்றால் இல்லை. ஆனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மட்டுமே குடும்பத்தை பயன்படுத்துவது குற்றம். அந்த மகிழ்ச்...

ஆடம்பரமும் அதன் அளவுகோலும்..

ஆடம்பரமும் , வீண் விரயமும்… ……… ஆடம்பரம், வீண் விரயம் குறித்து மக்களிடம் அதிகம் எச்சரிக்கை செய்கிறோம். விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான், அவர்கள் ஷைத்தானின் உடன்பிறப்புகள் என்கிற அல்குர்ஆன் வசனங்களை எடுத்து காட்டுகிறோம். . ஆனால் சிக்கல் எங்கே வருகிறது என்றால், “எது ஆடம்பரம்? “ என்பதை அறிவதில் தான். இந்த விடயத்தில் மிகுந்த தெளிவுடன் நாம் இருக்க வேண்டும். காரணம் " ஒவ்வொரு சமுதாயத்துக்கும் சோதனை உண்டு. எனது சமுதாயத்தின் சோதனை செல்வம் ஆகும்". என்பது நபிகளாரின் எச்சரிக்கையாகும். கஅப் இப்னு மாலிக் (ரலி). திர்மிதி 2336. அந்த சோதனை செல்வத்தை சம்பாதிக்கும் வழியிலும் வரும், செலவழிக்கும் வழியிலும் வரும். ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ற ஓர் அளவுகோலை வைத்துக்கொண்டு ஆடம்பரத்தை அளவிடுகிறார்கள். ஒருவருக்கு ஆடம்பரமாய் தெரிவது மற்றவருக்கு அத்தியாவசியமாகத் தெரிகிறது. ஆடம்பரத்துக்கு அழகு படுத்தல், எனக்கு இறைவன் அளித்த வசதிக்கு இது ஆடம்பரம் அல்ல என்று வியாக்கியானம் கூறுகிறார்கள். இதற்கு என்ன தான் தீர்வு ? குர்ஆன் ஒருபோதும் குழப்பமான கட்டளைகளை இடுவதில்லை. இந்த மார்க்கத்தின் இரவும் கூட பகலைப் போன்ற...