இஸ்லாத்தில் ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்
நோய் நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை (அர்ருக்யா) ஓதி நிவாரணம் தேடும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் தெரிந்து அமல்ப்படுத்துவதன் மூலம் அல்லாஹ் நாடினால் ஷிஃபா அடைலாம். மேலும் குறிப்பிட்ட மனிதர்கள் ஓதிப்பார்த்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விடுத்து, அனைவரும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தாமே ஓதிப்பார்க்கத் தொடங்க வேண்டும். இதன் மூலம், இறை வார்த்தையில் மட்டுமே நிவாரணம் (ஷிஃபா) உள்ளது என்ற உண்மையான நம்பிக்கைக்குப் பதிலாக, ஓதிவிடும் மனிதர்களைப் புனிதர்களாகக் கருதும் மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும். குறிப்பாக ஓதி பார்ப்பதில் தண்ணீரில் ஓதி ஊதுவது, தகடு, தாயத்து, கயிறு முடிவது, சில உணவு பொருட்களில் மந்திரிப்பது போன்ற ஷிர்க்கான, பித்அத்தான நடைமுறைகளை விட்டு ஒதுங்கி சரியான வழிமுறையை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வது அவசியமாகும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம். ========== 📌 வலிக்கு ஓதிப் பார்த்கும் முறை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்...