Posts

இஸ்லாம் விரோத மெட்டீரியலிஸ சிந்தணை ஓர் பார்வை

Image
இறைவனால் சோதனைக்காக வழங்கப்பட்ட அருட்கொடைகள் பலவிதம். சிலருக்கு பதவி அதிகாரங்களையும், சிலருக்கு செல்வ செழிப்பையும், சிலருக்கு மக்கள் செல்வாக்கையும், சிலருக்கு அறிவாற்றலையும் இறைவன் பூமியில் சோதனையாக வழங்கியுள்ளான். இந்த அருட்கொடைகள் யாவும் அவர்களின் சிறப்பு தகுதிகளோ, சிறப்பு அந்தஸ்தோ அல்ல, குறிப்பிட்ட கால சோதனைக்காக வழங்கப்பட்டவை. இவற்றை எந்தெந்த வழியில் பயன்படுத்தினார்கள் என்பது பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என இஸ்லாம் கூறுகிறது. ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ  பின்னர், அந்நாளில் நீங்கள் இந்த அருட்கொடையைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அல் குர்ஆன் -   102 : 8   மேலும் பூமியில் மனிதர்களுக்கு இறைவன் இந்த அருட்கொடைகளை வழங்கியிருப்பதே, அவர்களை சுற்றியுள்ள பலவீனர்களின் பொருட்டால் தான் என்று இஸ்லாம் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) காரணத்தால்தான் உங்களுக்கு (இறைவனின்) உதவியும் ரிஸ்கும் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள். - புகாரி 2896 . எனவே அந்த அருட்கொடைகளை வைத்து யாரும் பெருமையடிப்பதும் , மனிதர்களிடையே உ...

இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்..

Image
குடும்பத்துடம் சொர்க்கம் செல்வோரும் நரகம் செல்வோரும்.. பகுதி - 2 உலக உபகாரங்கள் மட்டுமே குடும்ப பொறுப்பாளர்களின் கடமையல்ல.. அதையும் தாண்டி மிக முக்கியமான பொறுப்புகளை இஸ்லாம் சுமத்தியுள்ளது. அது குறித்து மறுமையில் விசாரிக்கபடுவோம். அந்த பொறுப்புகளில் கவனமாற்று இருப்பவர்கள் குடும்பத்துடன் நரகம் நுழைவார்கள் என்பது பற்றிய அல்குர்ஆன் கூறும் எச்சரிக்கைகளை கடந்த பதிவில் பார்த்தோம். அந்த பொறுப்புகளை சரியாக நிறைவேற்றி குடும்பத்துடன் சொர்க்கம் செல்லும்  *இனிய இஸ்லாமிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும்?? இதற்கு இப்றாஹிம் அலை அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மிகச் சிறந்த முன்மாதிரி ஆவார்கள். இறைக்கட்டளை பிரகாரம் வேளாண்மையில்லாத பூமியில் தமது மனைவி ஹாஜர் (அலை) மற்றும் பாலகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை கொண்டுசென்று இப்றாஹீம் நபி அவர்கள் விட்டபோது “ இறைவன் தான் இப்படி கட்டளையிட்டானா?” என அன்னை ஹாஜர் அவர்கள் கேட்டார்கள். ஆமாம் என பதில் வந்தவுடன் ” அப்படியென்றால் இறைவன் என்னை கைவிட மாட்டான்”  என விட்ட இடத்திலேயே சென்று அமர்ந்து கொண்டார்கள், (பார்க்க புகாரி: 3364) அதே போல இறை...

இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்

Image
குடும்பத்துடன் சொர்க்கம் செல்வோரும், நரகம் செல்வோரும்.. وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ⭘ فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا⭘  யாருடைய ஏடு அவனது முதுகுக்குப் பின்புறமாக வழங்கப்படுகிறதோ, அவன் அழிவை வேண்டுவான். وَيَصْلَىٰ سَعِيرًا⭘ அவன் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவான். إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا⭘  அவன், தனது குடும்பத்தாருடன் (உலகில்) மகிழ்ச்சியாக இருந்தான். إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ⭘  (இறைவனிடம்) அவன் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டான். بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا⭘  அவ்வாறல்ல! அவனுடைய இறைவன், அவனைப் பார்ப்பவனாக இருந்தான். அல்குர்ஆன் -   84 : 10 - 15 📌 சிலரின் ஏடுகள் முதுகுக்கு பின்னாலிருந்து கொடுக்கப்பட்டு நரகில் எறியப்படுவதற்கு காரணம், அவர்கள் பூமியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது குற்றமா என்றால் இல்லை. ஆனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மட்டுமே குடும்பத்தை பயன்படுத்துவது குற்றம். அந்த மகிழ்ச்...

மனித ஷைத்தான்கள் - 2

Image
கடந்த பதிவில் ஷைத்தானின் வஅஸ்வாஸின் ஒரு வகையை பார்த்தோம். அதை வாசிக்காதவர்கள் வாசிக்கவும். அதன் லிங்க் .. https://umarkhatthab.blogspot.com/2025/04/1.html ========================== மனதை குழப்பும் ஷைத்தானின் வஸ்வாஸிலேயே மிக கவனம் எடுக்க வேண்டியது, உலக இன்பம் பக்கம் தூண்டும் ஷைத்தான்கள் பற்றிய அல்லாஹ்வின் எச்சரிக்கை.. உலக ஆசை , நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை விட்டும் அதாவது மறுமை சிந்தணையை விட்டும் நம்மை திசைதிருப்பும். தற்காலிக உலக இன்பங்களின் மீது ஈர்ப்பை ஏற்ப்படுத்தி, அல்லாஹ்வை மறக்கச் செய்யும். அல்லாஹ்வை மறந்து வாழ்பவன் ஷைத்தானின் பாதையில் செல்ல ஆரம்பித்து விடுவான்.அவனது தவறுகள் அவனுக்கு நியாயமாகப் படும். அமல்கள் பாரமாகும்.  தொழுகை இன்னபிற அமல்கள் செய்வதை விட்டும் தூரமாகி, அவனது மனது அதற்கும் ஏதோ ஒரு ஆறுதலைக் கூறி ஏமாற்றி அதன் வழியிலேயே செலுத்தும்.. அதனால் தான் பல இடங்களில் அல்லாஹ் ஏமாற்றக்கூடிய உலக வாழ்க்கை என்று கூறுகிறான். يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّۭ ۖ فَلَا تَغُرَّنَّكُمُ ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا ۖ وَلَا يَغُرَّنَّكُم بِٱللَّهِ ٱلْغَرُورُ⭘ ...

விவேகமான விவாதமும், அநாகரிக சண்டைகளும். - தஃவாவின் வழிமுறைகள்

Image
விவேகமான விவாதமும், அநாகரிக சண்டைகளும். - (தஃவா வழிமுறைகள் ) ============================== ٱدْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِٱلْحِكْمَةِ وَٱلْمَوْعِظَةِ ٱلْحَسَنَةِ ۖ وَجَـٰدِلْهُم بِٱلَّتِى هِىَ أَحْسَنُ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ ۖ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ⭘  உமது இறைவனின் பாதையை நோக்கி விவேகத்துடனும், அழகான அறிவுரையைக் கொண்டும் அழைப்பீராக! அவர்களுடன் சிறந்த முறையில் விவாதிப்பீராக! தனது பாதையை விட்டும் வழி தவறியவர் யார் என்பதை உமது இறைவனே நன்கறிந்தவன். நேர்வழி பெற்றோரையும் அவன் நன்கறிந்தவன். அல் குர்ஆன் -   16 : 125 தஃவாவில் அழகிய விவாதம் செய்வதற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.  அத்தகைய விவாதத்திற்கு தேவையான இரண்டு விசயங்களை இவ்வசனம் கூறுகிறது. 1.விவேகம் மிக்க பேச்சாற்றல் 2.அழகிய அறிவுரை கூடிய கல்வி இவை இருந்தால் தான் அது அல்லாஹ் அனுமதித்த அழகிய முறையில் விவாதித்தல் ஆகும். =================================== ஆனால் இங்கே சிலர் அநாகரீக வார்த்தைகளுடன் சண்டை போடுவதை கொள்கைக்கான விவாதம் என கருதுகின்றனர்.  வார்த்தைகளுக்கு ஓ...

உண்மையும் போலியும்

Image
உண்மையும் போலியும் மனிதர்கள் இரண்டு வழிகளில் சமுதாயத்தில் தங்களுக்கான நன்மதிப்பை பெறுகிறார்கள்.. 1. ஒருவரின் செல்வம், அதிகாரம் அதன் மூலம் அவர் கட்டமைத்துள்ள செல்வாக்கு, ஆதிக்கமான போக்கு இவற்றின் மூலம் கிடைக்கும் போலியான மறியாதை.. 2. எவ்வித செல்வமோ, செல்வாக்கோ இன்றி சாதாரண மனிதராக வாழ்ந்தும், ஒருவர் பிற மக்களிடம் வெளிப்படுத்தும் நற்குணம், நன்னடத்தை, எளிமை, நேர்மை ஆகியவற்றால் கிடைக்கும் உண்மையான மறியாதை.. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், முதல் வகை மனிதர்கள் சிலரை சமுதாயத்தில் காண்போம். அவர்களிடம் நாம் காணும் ஆணவம், தற்பெருமை, மோசடி, ஏமாற்று போன்ற தீய குணங்களுக்கு, அவர்களிடம் செல்வமும் செல்வாக்கும் மட்டும் இல்லையென்றால் மக்களிடம் எந்த நன்மதிப்பையும் பெற்றிருக்க மாட்டார்கள் எனும் அளவுக்கு தீய குணங்களையும், குறுகிய மனப்பான்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். . ஆனாலும் அவர்களுக்கு சமுதாயத்தில் மறியாதை செய்யப்பட காரணம் அவர்கள் மீதுகொண்ட நல் அபிப்ராயத்தால் அல்ல. மாறாக, துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதுபோல, இவர்களிடம் ஏன் வம்பு, இவர்களின் நாவிலும், தீங்கிலும் நாமும் சிக்க வே...

மனித ஷைத்தான்கள் -1

Image
மனித ஷைத்தான்கள் பதிவு 1 அமானிதமற்ற ரகசியம்.. ரகசியம் என்றாலே அமானிதம் தானே.. அதென்ன அமானிதமற்ற ரகசியம் எனக் கேட்டால், ஆம் ! உள்ளது… 📌 உங்களிடம் கஞ்சா, மது, போன்ற போதைப் பொருட்களை கொடுத்து அமானிதம் பேணச் சொன்னால் பேணுவீர்களா ? 📌 உங்களிடம் சில திருட்டு சாமான்களை கொடுத்து அமானிதம் பேணச் சொன்னால் பேணுவீர்களா ? பேண மாட்டீர்கள். காரணம் ஹலாலானவற்றுக்கே அமானிதம். ஹராமானவற்றில் அமானிதம் பேணக் கூடாது என்பதை அடிப்படை அறிவுள்ள எவரும் அறிந்து வைத்துள்ளோம்.. மேலும், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தையே ஹலாலானதாக இருந்தால் மட்டுமே நிறைவேற்ற வேண்டும். அறியாமையில் ஹராமுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றக் கூடாது என்பதை இவ்விடம் நினைவுறுத்துவது பொருத்தமாக இருக்கும்.. அதேபோல, 📌 உங்களிடம் ஒருவரைப் பற்றிய ஒரு மோசமான, எதிர்மறையான தகவலைச் சொல்லி இதை சம்பந்தப்பட்டவரிடம் கேட்காதீர்கள் என அமானிதம் பேணச் சொன்னால் பேணுவீர்களா ? பேணுவீர்கள்.. ஏனெனில் மதுவை போல, திருட்டை போல, விபச்சாரத்தை போல நாம் தான் பிறரைப் பற்றிய எதிர்மறை தகவல்கள் நமக்கு ஹராம் என்றே கருதுவதில்லையே.. தனது இறுதி வஸிய்யத்தில் பிறரின் ம...