Posts

Showing posts from April, 2017

சூனியத்தால் தாக்கம் உண்டா ?

 சூனியத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.சூனியக் காரர்கள் சில தந்திர வித்தைகளை காட்டி தனக்கு மந்திர வித்தைகள் தெரியும் என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர், புரட்டாசி இன்றி எங்கோ இருக்கும் ஒருவர் இன்னொருவனுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது இஸ்லாமிய நம்பிக்கைக்கே மாற்றமானது என்பது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் எடுத்தியம்பி வருகிறோம்.. போதிலும் சூனியத்தை நம்பக்கூடியவர்கள் அதற்கு ஒரு புரட்டி வாதங்களை கற்பித்து மக்களை குழப்பி வருகின்றனர்... أحمد – (ج 45 / ص 477) 26212 – حدثنا أبو جعفر السويدي قال حدثنا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمعت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا مؤمن بسحر ولا مدمن خمر ولا مكذب بقدر நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி),                   நூல் : அஹ்மது (26212) சூனியம் இல்லை என்பதற்கு இந்த நபிமொழ

மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம்.!

          ந பித்துவ வரலாற்றில் பெரும் அற்புதமாகவும், அத்தாட்சிகளையும் உள்ளடக்கிய அந்த நிகழ்வு நபியவர்களின் மக்கா வாழ்வின் போது நடைபெற்றது. மிஃராஜ் தொடர்பாக ஏராளமான கட்டுக்கதைகள் மக்களிடம் பரப்புரை செய்யப்படுகிறது. அவற்றை கலைந்து மிஃராஜின்போது நிகழ்ந்தவைகளை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இங்கே அறியத் தருகிறோம்.. இந்நிகழ்வு ரஜப் 27ல் நடைபெற்றதாக ஒரு தவறான நம்பிக்கை மக்களிடம் விதைக்கப்பட்டுள்ளது.இதற்கு உறுதியான எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் கிடையாது. மேலும் மிஃராஜ்  நோன்பு என்ற பெயரில் நோன்பு நோற்பதும் நபிகளார் காட்டித் தராத பித்அத்தான (புதுமை) அனாச்சாரம் ஆகும். மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். அல்குர்ஆன் 17:1 ஜிப்ரீல் வருகை - அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: "நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கினார்கள். என்னுடைய நெஞ்சைப் பி

வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள். தொடர் - 4

இறைதூதர் அல்லாதோரின் வழிமுறை மார்க்க ஆதாரம் ஆகுமா ? தக்லீது என்கிற வழிகெட்ட கொள்கையால் இந்த சமுதாயத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் ஏராளாம்.இந்த மார்க்க சட்டதிட்டங்களை நமக்கு போதித்த அல்லாஹ்வின் வசனங்களுக்கு, அதனை விளக்கிக் கூற வந்த நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவையே சரியான விளக்கங்களை நமக்கு கொடுக்க முடியும்.மார்க்க சட்டங்களில் கருத்து வேறுபாடுகள், சந்தேகங்கள் எழும்போது நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றை முறையாக ஆய்வுசெய்தாலே போதுமான தெளிவு கிடைக்கும்.. அதில்தான் நேர்வழியும் உள்ளது.. அதைவிடுத்து, மார்க்க சட்டங்களை விளங்குவதற்கு எங்களுக்கு நபிகளாரின் வாழ்வும், வழிமுறையும் போதாது, நபிகளாருக்கு பின் வந்த ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉ தாபிஈன்கள், இமாம்கள், நமது முன்னோர்கள் என இத்துனை சமுதாயத்தவரின் விளக்கங்களும் தேவை எனக் கூறுவோர் இந்த மார்க்கம் நபிகளார் காலத்தோடு முழுமையாக்கப் பட்டுவிட்டது என்கிற அடிப்படையை அறியாதோராகவே இருக்க வேண்டும்.. அல்லது இந்த மார்க்கத்தை அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் மக்களுக்கு புரியும்படி விளக்கிக் கூறவில்லை என்கிற வழிகெட்ட கொள்கையுடையோராக இருக்க வேண்டும

நபி வழியில் கபுர் ஜியாரத் ..

கபுர் ஜியாரத் என்ற நபிவழி மார்க்கத்தில் ஆண் பெண் இருபாலருக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது.இந்த நபிவழியை தர்காவில் செய்யும் அமல் என்று பலர் கருதி வருகின்றனர்.இது முற்றிலும் தவறு..கபுர் ஸியாரத்துக்கும் தர்காவுக்கும் சம்பந்தமேயில்லை..ஏன் இஸ்லாத்திற்கும் தர்காவுக்குமே சம்பந்தமே இல்லை என சொல்லலாம்.. (அலீ (ரலி) அவர்களின் ஆட்சிகாலத்தில் அவர்களது படைத்தளபதியாக இருந்த அபுல்ஹய்யாஜ் அல் அஸதி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம்.. "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) "உயர்ந்துள்ள எந்தக் கப்றையும்" தரை மட்டமாக்காமல் விடாதீர்!" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபுல்ஹய்யாஜ் அல்அஸதி (ரஹ்)                  நூல்: முஸ்லிம் 1764 கபுர்கள் காரையால் கட்டப்படுவதையும், பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்த

வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள். தொடர் - 3

ஸஹாபாக்கள் ஹதீஸ்களை அனுகிய முறையும், இன்று ஸலஃபுகள் என சொல்லிக் கொள்வோரின் நாடகமும்.. இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து “சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்து விட்டு, “அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக! இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக “அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள்” என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு 57:22 என்ற வசனத்தை ஓதினார்கள். அறிவிப்பவர்: அபூஹஸ்ஸான் (ரஹ்) நூல்: அஹ்மத் (24894 ) பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் சகுனம் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, அபு ஹுரைரா (ரலி) அறிவித்து வருகிறார் என்று கூறி, அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் விளக்கம் கேட்கிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு கூறியிருக்க மாட்டார்கள் என்று மறுத்துபின்வரும் த

வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள்.. தொடர் - 2

ஸஹாபாக்கள் மார்க்கத்தை விளங்கிய முறையும், இன்றைய ஸலஃபுகள் எனசொல்லிக் கொள்வோரின் வழிமாறிய பயணமும். பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார்.அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பது போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும் பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா? என்று கேட்டார்கள். (முஃகீஸீடமிருந்து பரீரா பிரிந்துவிட்டபோது) நபி (ஸல்) அவர்கள் முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா? என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் (இல்லை) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன் என்றார்கள். அப்போது பரீரா (அப்படியானால்) அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறிவிட்டார். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல்

வந்தவழியே திரும்பும் ஸலஃபுகள்.. தொடர் - 1

ஏகனின் திருப்பெயரால்... "குர்ஆன், ஹதீஸை எல்லா மனிதர்களாலும் விளங்க முடியாது" இந்த வாசகத்தைக் கூறியே, இந்த ஏகத்துவ மார்க்கத்தில் ஏராளமான ஷிர்க், பித்அத்களைப் புகுத்தினார்கள், நம்மால் 'உலமாக்கள்' என்று நம்பப்பட்டவர்கள்.அல்லாஹ்வின் கிருபையால் ஏகத்துவ வாதிகளின் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான பிரச்சாரங்களின் மூலம் அவையெல்லாம் தவிடு பொடியாக்கப்பட்டு, ஒரு செயலை மார்க்கம் என்று யார் கூறினாலும் ஆதாரம் கேட்பது; குர்ஆன், ஹதீஸில் இருந்தால் மட்டுமே அது மார்க்கம்; எவருடைய சுய கருத்துக்களும் மார்க்கம் ஆகாது; யாரையும் கண்மூடித்தனமாக தக்லீத் செய்யக் கூடாது என்கிற விழிப்புணர்வை மக்கள் ஓரளவுக்கு அடைந்து வருகின்றார்கள்.. ஆனால், அன்று மக்களை மடமையில் தள்ளிய அன்றைய உலமாக்களின் "குர்ஆன், ஹதீஸை எல்லா மனிதர்களாலும் விளங்க முடியாது" என்கிற அதே வாதம், இன்று ஏகத்துவக் கொள்கையின் பெயரிலேயே மக்களிடம் மீண்டும் முன்வைக்கப் படுகின்றது என்பதை கவனிக்கத் தவறி விடுகின்றோம்..  ஸலஃபுகளின் வழிகெட்ட பிரச்சாரம் :- குர்ஆன், ஹதீஸை எல்லோராலும் விளங்க முடியாது. ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஉத் தாபிஈன்க