தலாக் சட்டங்கள்.. தொடர் 5
க ணவன் மனைவியிடையே பிரச்சனைகள் வந்து நல்லிணத்திற்கான இஸ்லாம் கூறும் அனைத்து வழிமுறைகளும் கடைபிடிக்கப்பட்ட பின்னரும் பயனில்லை என்றால் தலாக் என்ற அமர்வுக்கு வர இஸ்லாம் அனுமத்திக்கின்றது என்று சென்ற தொடர்களில் பார்த்தோம்.. (முந்தைய தொடரை வாசிக்க) தலாக் செய்யப்படும் பெண் அந்த நேரத்தில் தூய்மையான நிலையில் இருக்க வேண்டும்..அதாவது பெண்ணுடைய மாதவிலக்கு காலத்தில் தலாக் சொல்லக்கூடாது... நான் என் மனைவியை, அவள் மாதவிடாயிலிருந்தபோது தலாக் சொல்லிவிட்டேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் இதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தையிடம்) "உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்; அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளட்டும்! அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, பிறகு இரண்டாவது மாதவிடாய் ஏற்பட்டுப் பிறகு அதிலிருந்தும் தூய்மையடையட்டும்! பின்னர் அவர் (விரும்பினால்) தலாக் சொல்லிக்கொள்ளட்டும். அல்லது தம்மிடம் (மனைவியாக) வைத்துக்கொள்ளட்டும்! " என்று சொன்னார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) முஸ்லிம் 2923 மாதவிலக்கு ந