Posts

Showing posts from May, 2025

ஆடம்பரமும் அதன் அளவுகோலும்..

ஆடம்பரமும் , வீண் விரயமும்… ……… ஆடம்பரம், வீண் விரயம் குறித்து மக்களிடம் அதிகம் எச்சரிக்கை செய்கிறோம். விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான், அவர்கள் ஷைத்தானின் உடன்பிறப்புகள் என்கிற அல்குர்ஆன் வசனங்களை எடுத்து காட்டுகிறோம். . ஆனால் சிக்கல் எங்கே வருகிறது என்றால், “எது ஆடம்பரம்? “ என்பதை அறிவதில் தான். இந்த விடயத்தில் மிகுந்த தெளிவுடன் நாம் இருக்க வேண்டும். காரணம் " ஒவ்வொரு சமுதாயத்துக்கும் சோதனை உண்டு. எனது சமுதாயத்தின் சோதனை செல்வம் ஆகும்". என்பது நபிகளாரின் எச்சரிக்கையாகும். கஅப் இப்னு மாலிக் (ரலி). திர்மிதி 2336. அந்த சோதனை செல்வத்தை சம்பாதிக்கும் வழியிலும் வரும், செலவழிக்கும் வழியிலும் வரும். ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ற ஓர் அளவுகோலை வைத்துக்கொண்டு ஆடம்பரத்தை அளவிடுகிறார்கள். ஒருவருக்கு ஆடம்பரமாய் தெரிவது மற்றவருக்கு அத்தியாவசியமாகத் தெரிகிறது. ஆடம்பரத்துக்கு அழகு படுத்தல், எனக்கு இறைவன் அளித்த வசதிக்கு இது ஆடம்பரம் அல்ல என்று வியாக்கியானம் கூறுகிறார்கள். இதற்கு என்ன தான் தீர்வு ? குர்ஆன் ஒருபோதும் குழப்பமான கட்டளைகளை இடுவதில்லை. இந்த மார்க்கத்தின் இரவும் கூட பகலைப் போன்ற...