Posts

Showing posts from 2025

இஸ்லாத்தில் ஓதிப்பார்க்கும் முறைகளும் துஆக்களும்

Image
நோய் நொடிகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் குறிப்பிட்ட துஆக்கள் மற்றும் குர்ஆன் வசனங்களை (அர்ருக்யா) ஓதி நிவாரணம் தேடும் முறையை நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அவற்றை நாம் தெரிந்து அமல்ப்படுத்துவதன் மூலம் அல்லாஹ் நாடினால் ஷிஃபா அடைலாம்.  மேலும் குறிப்பிட்ட மனிதர்கள் ஓதிப்பார்த்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை விடுத்து, அனைவரும் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் தாமே ஓதிப்பார்க்கத் தொடங்க வேண்டும்.​ இதன் மூலம், இறை வார்த்தையில் மட்டுமே நிவாரணம் (ஷிஃபா) உள்ளது என்ற உண்மையான நம்பிக்கைக்குப் பதிலாக, ஓதிவிடும் மனிதர்களைப் புனிதர்களாகக் கருதும் மூடநம்பிக்கையிலிருந்து விடுபட முடியும். குறிப்பாக ஓதி பார்ப்பதில் தண்ணீரில் ஓதி ஊதுவது, தகடு, தாயத்து, கயிறு முடிவது, சில உணவு பொருட்களில் மந்திரிப்பது போன்ற ஷிர்க்கான, பித்அத்தான நடைமுறைகளை விட்டு ஒதுங்கி சரியான வழிமுறையை ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வது அவசியமாகும். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நபியவர்கள் ஓதிப் பார்த்த முறைகளைக் காண்போம். ========== 📌 வலிக்கு ஓதிப் பார்த்கும் முறை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்...

ஆடம்பரமும் அதன் அளவுகோலும் ஓர் ஆய்வு

Image
                    ஆ டம்பரம், வீண் விரயம் குறித்து மக்களிடம் அதிகம் எச்சரிக்கை செய்கிறோம். விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான், அவர்கள் ஷைத்தானின் உடன்பிறப்புகள் என்கிற அல்குர்ஆன் வசனங்களை எடுத்து காட்டுகிறோம். ஆனால் சிக்கல் எங்கே வருகிறது என்றால், “எது ஆடம்பரம்? “ என்பதை அறிவதில் தான். இந்த விடயத்தில் மிகுந்த தெளிவுடன் நாம் இருக்க வேண்டும். காரணம் " ஒவ்வொரு சமுதாயத்துக்கும் சோதனை உண்டு. எனது சமுதாயத்தின் சோதனை செல்வம் ஆகும்". என்பது நபிகளாரின் எச்சரிக்கையாகும். திர்மிதி 2336. அந்த சோதனை செல்வத்தை சம்பாதிக்கும் வழியிலும் வரும், செலவழிக்கும் வழியிலும் வரும். இதை உணராமல் செல்வத்தை சம்பாதிப்பதில் ஹராம் ஹலால் பார்த்து பேணுதலுடன் இருப்பவர்கள் கூட, அதை செலவழிக்கும் விடயத்தில் அவர்களையே அறியாமல் ஆடம்பரத்திலும் வீண் விரயத்திலும் வீழ்ந்து விடுகின்றனர். இது குறித்து நபிகளார் எச்சரித்துள்ளார்கள். ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) எனக்குப்பின் 'இறைவன் உங்களுக்காக வெளிக் கொண...