Posts

Showing posts from April, 2025

உண்மையும் போலியும்

Image
உண்மையும் போலியும் மனிதர்கள் இரண்டு வழிகளில் சமுதாயத்தில் தங்களுக்கான நன்மதிப்பை பெறுகிறார்கள்.. 1. ஒருவரின் செல்வம், அதிகாரம் அதன் மூலம் அவர் கட்டமைத்துள்ள செல்வாக்கு, ஆதிக்கமான போக்கு இவற்றின் மூலம் கிடைக்கும் போலியான மறியாதை.. 2. எவ்வித செல்வமோ, செல்வாக்கோ இன்றி சாதாரண மனிதராக வாழ்ந்தும், ஒருவர் பிற மக்களிடம் வெளிப்படுத்தும் நற்குணம், நன்னடத்தை, எளிமை, நேர்மை ஆகியவற்றால் கிடைக்கும் உண்மையான மறியாதை.. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், முதல் வகை மனிதர்கள் சிலரை சமுதாயத்தில் காண்போம். அவர்களிடம் நாம் காணும் ஆணவம், தற்பெருமை, மோசடி, ஏமாற்று போன்ற தீய குணங்களுக்கு, அவர்களிடம் செல்வமும் செல்வாக்கும் மட்டும் இல்லையென்றால் மக்களிடம் எந்த நன்மதிப்பையும் பெற்றிருக்க மாட்டார்கள் எனும் அளவுக்கு தீய குணங்களையும், குறுகிய மனப்பான்மையும் கொண்டவர்களாக இருப்பார்கள். . ஆனாலும் அவர்களுக்கு சமுதாயத்தில் மறியாதை செய்யப்பட காரணம் அவர்கள் மீதுகொண்ட நல் அபிப்ராயத்தால் அல்ல. மாறாக, துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதுபோல, இவர்களிடம் ஏன் வம்பு, இவர்களின் நாவிலும், தீங்கிலும் நாமும் சிக்க வே...

மனித ஷைத்தான்கள் -1

Image
மனித ஷைத்தான்கள் பதிவு 1 அமானிதமற்ற ரகசியம்.. ரகசியம் என்றாலே அமானிதம் தானே.. அதென்ன அமானிதமற்ற ரகசியம் எனக் கேட்டால், ஆம் ! உள்ளது… 📌 உங்களிடம் கஞ்சா, மது, போன்ற போதைப் பொருட்களை கொடுத்து அமானிதம் பேணச் சொன்னால் பேணுவீர்களா ? 📌 உங்களிடம் சில திருட்டு சாமான்களை கொடுத்து அமானிதம் பேணச் சொன்னால் பேணுவீர்களா ? பேண மாட்டீர்கள். காரணம் ஹலாலானவற்றுக்கே அமானிதம். ஹராமானவற்றில் அமானிதம் பேணக் கூடாது என்பதை அடிப்படை அறிவுள்ள எவரும் அறிந்து வைத்துள்ளோம்.. மேலும், அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தையே ஹலாலானதாக இருந்தால் மட்டுமே நிறைவேற்ற வேண்டும். அறியாமையில் ஹராமுக்கு செய்த சத்தியத்தை நிறைவேற்றக் கூடாது என்பதை இவ்விடம் நினைவுறுத்துவது பொருத்தமாக இருக்கும்.. அதேபோல, 📌 உங்களிடம் ஒருவரைப் பற்றிய ஒரு மோசமான, எதிர்மறையான தகவலைச் சொல்லி இதை சம்பந்தப்பட்டவரிடம் கேட்காதீர்கள் என அமானிதம் பேணச் சொன்னால் பேணுவீர்களா ? பேணுவீர்கள்.. ஏனெனில் மதுவை போல, திருட்டை போல, விபச்சாரத்தை போல நாம் தான் பிறரைப் பற்றிய எதிர்மறை தகவல்கள் நமக்கு ஹராம் என்றே கருதுவதில்லையே.. தனது இறுதி வஸிய்யத்தில் பிறரின் ம...

தஃவாவின் படித்தரங்கள்

Image
ஒவ்வொரு பணிக்கும் அந்த துறை சார்ந்த அறிவு என்பது அவசியம். . அரபு படிக்காதவர்கள் பயான் செய்யலாம்.. மொழிபெயர்ப்பு ஆதாரங்களை வைத்து கட்டுரைகள் ஆக்கங்கள் தயார் செய்யலாம்..  . ஆனால் ஃபிக்ஹ் மஸாயில்கள், ஹதீஸ் கலை உள்ளிட்டவைகளில் ஆய்வுகள் செய்து மார்க்க தீர்ப்புகள் வழங்குவதற்கும் அரபு மொழி புலமையும், ஹதீஸ் கலை சார்ந்த அறிவும் அவசியம் என்பதை மறுக்க முடியாது.. . அந்த பயான்களும், கட்டுரைகளுமே ஆலிம்களின் மேற்பார்வைக்குட்பட்டு இருப்பது கூடுதல் நலனாகும்.. . காரணம் மார்க்கத்தின் மூல ஆதாரங்கள் அரபியில் உள்ளன.. மேலும் அரபு படித்தவர்கள் ஏதோ பயானுக்கு குறிப்பு எடுக்கும் அளவில் படிப்பவர்கள் அல்ல.. வாழ்நாளில் குறிப்பிட்ட வருடங்கள் அதற்காகவே ஒதுக்கி உழைப்பை கொடுத்தவர்கள். . சில வேலைகளில் அவர்களின் ஆய்வுகளிலேயே பிழைகள் வருகிறது எனும்போது, அரைகுறை மொழியறிவுடன் செய்யப்படும் ஆய்வுகள் இன்னும் கவனம் எடுக்கப்பட வேண்டியவை.. . அறிவுக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லை என்பது எந்தளவு உண்மையோ, அதேபோல வேறு மொழியிலிருந்து மார்க்க ஆய்வுகள் செய்வதற்கு அரபு மொழிப் புலமை அவசியம் என்பதும் மறுக்கவியலாத உண்மை.. . அ...