Posts

Showing posts with the label இயக்கசண்டை

இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் மற்றும் முஷ்ரிக்..

Image
அளவிலா அருளாலனும் நிகரிலா அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடுகள் மேலோங்கிய காலம் முதலே தங்களுக்கு மாற்றுக் கருத்தில் உள்ள சக முஸ்லிம் சகோதரனை நோக்கி முஷ்ரிக் காஃபிர் என முத்திரைக் குத்துவது சர்வ சாதாரண ஒன்றாக மாறியுள்ளது. இது பற்றிய தெளிவின்மையால் ஒரு முஸ்லிம் சக முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளில் தவறிழைக்கும் நிலை ஏற்ப்படுகிறது. உதாரணமாக ஒருவரை முஷ்ரிக் என முடிவெடுத்து விட்டால் அவருடன் திருமண உறவு வைப்பது, அவரின் ஜனாஸாவில் பங்கெடுப்பது, அவருக்காக தவ்பா செய்வது என அனைத்தும் முஸ்லிம்களுக்கு ஹராமாகி விடுகிறது. இதையெல்லாம் சிந்திக்காமல் முஸ்லிம்களை நோக்கி அவசரகதியில் கொடுக்கப்படும் முர்தத் ஃபத்வாக்களால் அவசியமற்ற இடங்களிலெல்லாம் முஸ்லிம்களிடையே பிளவை உண்டாக்கி பாவம் சம்பாதிக்க வேண்டிய நிலை உண்டாகும். எனவே இஸ்லாத்தின் பார்வையில் முஸ்லிம் யார் முஷ்ரிக் யார் என்பது பற்றிய தெளிவு முஸ்லிம்களுக்கு இருப்பது அவசியமாகும். ஒருவர் முஸ்லிமா இல்லையா என்பதை மட்டுமே அவருடைய வெளிப்படையை வைத்து நாம் தீர்மாணிக்க முடியும். காரணம் இஸ்லாம் என்பது செயல் சம்பந்தப்பட்டது....

இஸ்லாத்தில் பட்டப்பெயர்கள்

தமது கொள்கைக்கு மாற்றுக் கருத்தில் உள்ளவர்களை பட்டப்பெயர் வைத்து இழிவுபடுத்துவது முஸ்லிம்கள் சிலரிடம் உள்ள தீய பழக்கமாகும். . இஸ்லாம் ஒருபோதும் தீய பட்டப்பெயர்கள் வைப்பதை ஆதரிக்கவில்லை. அதற்கு எதிராகவே பேசுகிறது. . يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا يَسْخَرْ قَوْمٌۭ مِّن قَوْمٍ عَسَىٰٓ أَن يَكُونُوا۟ خَيْرًۭا مِّنْهُمْ وَلَا نِسَآءٌۭ مِّن نِّسَآءٍ عَسَىٰٓ أَن يَكُنَّ خَيْرًۭا مِّنْهُنَّ ۖ وَلَا تَلْمِزُوٓا۟ أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا۟ بِٱلْأَلْقَـٰبِ ۖ بِئْسَ ٱلِٱسْمُ ٱلْفُسُوقُ بَعْدَ ٱلْإِيمَـٰنِ ۚ وَمَن لَّمْ يَتُبْ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلظَّـٰلِمُونَ⭘  இறைநம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம், மற்றொரு சமுதாயத்தை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள், இவர்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும், மற்றப் பெண்களை ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களைவிடச் சிறந்தோராக இருக்கலாம். உங்களுக்குள் (ஒருவரையொருவர்) குறை கூறிக் கொள்ளாதீர்கள். (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள். இறைநம்பிக்கைக்குப்பின் தீய பெயர்களைச் சூட்டுவது மிகக் கெட்டது. யார் பாவ மன்னிப்புத் தேடவில்லையோ அவர்களே...