இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்
இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம் எப்படி இருக்க வேண்டும்??
இறைக்கட்டளை பிரகாரம் வேளாண்மையில்லாத பூமியில் தமது மனைவி ஹாஜர் (அலை) மற்றும் பாலகன் இஸ்மாயீல் (அலை) அவர்களை கொண்டுசென்று இப்றாஹீம் நபி அவர்கள் விட்டபோது “இறைவன் தான் இப்படி கட்டளையிட்டானா?” என அன்னை ஹாஜர் அவர்கள் கேட்டார்கள். ஆமாம் என பதில் வந்தவுடன் ”அப்படியென்றால் இறைவன் என்னை கைவிட மாட்டான்” என விட்ட இடத்திலேயே சென்று அமர்ந்து கொண்டார்கள், (பார்க்க புகாரி: 3364)
அதே போல இறைக்கட்டளை பிரகாரம் மகனை அறுப்பதற்கு இப்றாஹீம் அலை அவர்கள் தயார் ஆனபோது “உங்களுக்கு கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றுங்கள், நான் பொறுமையாக இருப்பேன்” என்று இஸ்மாயீல் அலை கூறினார்கள். அல் குர்ஆன் 37:102
இவையெல்லாம் எதை காட்டுகிறது?
இஸ்மாயீலையும் இவ்வேதத்தில் நினைவுகூர்வீராக! அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
அல் குர்ஆன் - 19 : 54
وَكَانَ يَأْمُرُ أَهْلَهُۥ بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ وَكَانَ عِندَ رَبِّهِۦ مَرْضِيًّۭا
அவர், தமது குடும்பத்தாருக்குத் தொழுகை மற்றும் ஸகாத்தை (நிறைவேற்றுமாறு) ஏவக்கூடியவராக இருந்தார்; தமது இறைவனிடம் பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் இருந்தார்.
அல் குர்ஆன் - 19 : 55
إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰٓ ءَادَمَ وَنُوحًۭا وَءَالَ إِبْرَٰهِيمَ وَءَالَ عِمْرَٰنَ عَلَى ٱلْعَـٰلَمِينَ
ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் குடும்பத்தினரையும், இம்ரானின் குடும்பத்தினரையும் அகிலத்தாரைவிட அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ
( நபியே ) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு. அல்குர்ஆன் 20:132
சாப்பிட்டாயா என கேட்கும் அளவுக்கு கூட, கடமையான தொழுகைகளை தொழுதாயா என குடும்பத்தினருக்குள் கேட்டுக் கொள்வதில்லை.
அல்லது ஃபஜ்ர் தொழுகைக்கு பிள்ளைகளை எழுப்புவதை அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதாக பெற்றோர்கள் கருதுகிறார்கள்.
கணவன் உழைத்த களைப்பில் உறங்குகிறார் என மனைவி நினைப்பதும், மனைவி வீட்டு வேலை செய்த களைப்பில் உறங்குகிறார் என கணவன் நினைப்பதும் அவர்கள் மீது காட்டும் அக்கறை போல ஷைத்தான் நமக்கு அழகாக்கி காட்டுகிறான்.
உண்மையில் அக்கறை என்பது அவர்களை நரகிலிருந்து காக்க நாம் எடுக்கும் முயற்சிகள் தான். ஆகவே தொழுகையை குடும்பத்தில் ஏவுவதை சிரமமாக கருதுவிடக்கூடாது.
📌 இரவுத் தொழுகையில் இணைந்து செயல்படும் குடும்பத்திற்கு இறைதூதரின் பிரார்த்தனையை பெரும் பாக்கியம்
ஒரு மனிதருக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான்.ஒரு மனிதர் இரவில் எழுந்து இறைவனை தொழுகிறார். தனது மனைவியையும் எழுப்பி விடுகிறார். அவள் உறங்கிக் கொண்டிருந்தால் அவள் முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்புகிறார்..
இன்னும், ஒரு பெண் இரவில் தொழுகைக்கு எழுகிறார். தனது கணவனையும் எழுப்பி விடுகிறார். அவர் உறங்கிக் கொண்டிருந்தால் அவர் முகத்தில் தண்ணீர் ஊற்றி எழுப்புகிறார்.இத்தகைய பெண்ணுக்கு அல்லாஹ் அருள் புரிகின்றான். நூல் : இப்னு மாஜா
إِذَا اسْتَيْقَظَ الرَّجُلُ مِنَ اللَّيْلِ وَأَيْقَظَ امْرَأَتَهُ، فَصَلَّيَا رَكْعَتَيْنِ كُتِبَا مِنَ الذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ ".
حكم الحديث: صحيح
இரவில் ஒருவர் எழுந்து, தன் மனைவியையும் எழுப்பிவிட்டு, இருவரும் இரவில் இரண்டு ரக்அத்துக்கள் தொழுதால், (அல்குர் ஆன் 33:35 வசனம் சொல்வது போல்) அல்லாஹ்வை அதிகம் நினைவுக்கூரும் ஆண் & பெண் என்கிற தகுதியை அவர்கள் அடைகிறார்கள்.நூல் : இப்னு மாஜா
ஸஹீஹ் புகாரி : 476.
சிறு வயதிலிருந்தே தனது தந்தையை தொழுபவராக பார்த்த ஆயிஷா (ரலி) பிற்காலத்தில் பெண்களிலேயே அதிகமான ஹதீஸ்களை அறிவித்தவராக, கல்வியில் தேர்ந்தவராக திகழ்கிறார்கள். பெற்றோர்கள் அபூபக்கர் ரலி போல இருந்தால் தான் பிள்ளைகளை ஆயிஷா ரலி போல எதிர்பார்க்க முடியும். பெற்றோர்களிடம் அமல்கள் செயல்வடிவம் இல்லாமல் வெறும் வாயளவில் மட்டும் இருந்தால் அது பிள்ளைகளிடம் பெரிய மாற்றத்தை தராது.
உபரியான தொழுகைகளை பள்ளியில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறந்தது நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். அல்குர்ஆன் ஓதப்படாத இல்லங்களை நபிகளார் மண்ணறைக்கு ஒப்பாக கூறுகிறார்கள். இவற்றையெல்லாம் வீடுகளில் பேணுவதன் மூலமே குடும்பத்தினரை மார்க்க சிந்தணையிலேயே வைத்திருக்க முடியும்.
📌 குடும்ப பிளவுகளை தவிர்க்க பெரியவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்
சிறுவனாக இருந்த யூசுப் நபியை கிணற்றில் தள்ளிவிட்டு ஓநாய் சாப்பிட்டுவிட்டதாக கூறிய பிள்ளைகளிடம் யஃகூப் அலை கூறிய பொறுமையான வார்த்தைகளே சூழ்ச்சிக்கார மகன்களை பிற்காலத்தில் நல்ல மனிதர்களாக மாற்றியது.
قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًۭا ۖ فَصَبْرٌۭ جَمِيلٌ ۖ عَسَى ٱللَّهُ أَن يَأْتِيَنِى بِهِمْ جَمِيعًا ۚ إِنَّهُۥ هُوَ ٱلْعَلِيمُ ٱلْحَكِيمُ
“இல்லை! உங்கள் உள்ளங்கள் ஒரு செயலை உங்களுக்கு அலங்கரித்துக் காட்டி விட்டன. (எனது நிலை) அழகிய பொறுமையே! அவர்கள் அனைவரையும் அல்லாஹ் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கக் கூடும். அவனே நன்கறிந்தவன், நுண்ணறிவாளன்” என்று (யஃகூப்) கூறினார்.
அல் குர்ஆன் - 12 : 83
அந்த பொறுமையே பாவமன்னிப்பு தேடுபவர்களாக அவர்களை மாற்றியது..
قَالُوا۟ يَـٰٓأَبَانَا ٱسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَآ إِنَّا كُنَّا خَـٰطِـِٔينَ
“எங்கள் தந்தையே! எங்களுடைய பாவங்களுக்காக எங்களுக்குப் பாவ மன்னிப்புக் கோருவீராக! நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கிறோம்” என்று கூறினார்கள். அல் குர்ஆன் - 12 : 97
இதில் கவனிக்க வேண்டிய அம்சம், தனக்கு விருப்பமான பிள்ளையை தொலைத்துவிட்டு வந்ததால், மற்ற பிள்ளைகளிடம் யாஃகூப் அலை அவர்கள் வெறுப்பை உமிழ்ந்து பாரபட்சத்துடன் நடந்துகொள்ள வில்லை. அல்லாஹ்வை முன்னிறுத்தி அவர்களின் தவறை உணர்த்தும் அதே வேலையில் பொறுமையையும் கைக்கொண்டார்கள். அதுவே அவர்களை நல்லவர்களாக மாற்றியது.
ஆனால் இன்றோ, பிள்ளைகள் மத்தியில் ஏற்படும் மனக்கசப்புகளின் போது பொறுப்புடன் நீதியாக நடந்து அவர்களிடையே இணக்கத்தை ஏற்ப்படுத்த வேண்டிய பெற்றோர்ளே, தனக்கு பிடித்த பிள்ளையிடம் ஒரு மாதிரியும் மற்றவர்களிடம் வேறு விதமாகவும் நடந்து பிளவை பெரிதாக்கி விடுகின்றனர்.
இது மிகவும் தவறாகும்.குடும்பத்தினர்கள் மத்தியில் பழிவாங்கும் உணர்வு இன்றி ஒருவருக்கொருவர் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும்.
قَالَ لَا تَثْرِيبَ عَلَيْكُمُ ٱلْيَوْمَ ۖ يَغْفِرُ ٱللَّهُ لَكُمْ ۖ وَهُوَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ
இது தன்னை கிணற்றில் வீசி பல இன்னல்களுக்கு ஆளாக்கிய சகோதரர்களை, யூசுஃப் அலை அவர்கள் சந்தித்த போது கூறிய வார்த்தைகள்.அப்போது யூசுஃப் அலை அவர்கள் நாட்டின் அமைச்சராக இருந்தார்.பெரும் அதிகாரம் உடையவராக மாறிய பின்னரும் தமது சகோதரர்களை தண்டிக்காமல், மன்னித்ததன் மூலம் அவர்களை நேர்வழியின் பக்கம் அழைத்தார்.
இன்று அற்ப உலக சொத்து சுகங்களுக்காக உடன்பிறப்புகளுடன் கடும் பகையுணர்வு கொண்டு முறித்து வாழ்வோர் இதில் படிப்பினை பெற வேண்டும்.
📌 நல்லோர்களின் இறுதி வசிய்யத்
இப்ராஹிம் அலை அவர்களும் யஃகூப் அலை அவர்களும் தமது இறுதிக்காலத்தில் தம் பிள்ளைகளுக்கு மார்க்கத்தில் நிலைத்திருக்குமாறு வஸிய்யத் செய்கிறார்கள்.
وَوَصَّىٰ بِهَآ إِبْرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَـٰبَنِىَّ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ
“என் பிள்ளைகளே! உங்களுக்காக இம்மார்க்கத்தை அல்லாஹ் தேந்தெடுத்துள்ளான். எனவே முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்க வேண்டாம்” என்பதையே தம் மக்களுக்கு இப்ராஹீமும், யஃகூபும் அறிவுறுத்தினர். அல் குர்ஆன் - 2 : 132
குடும்பத்துடன் இறைவனை பற்றியும், இறைதூரகள் பற்றியும், இறைவழியில் பாடுபட்ட தியாகிகளின் வரலாறு பற்றியும் படிக்கும் பழக்கமும், காலந்துரையாடும் பழக்கமும் குடும்பத்தினரிடையே ஏற்ப்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் அல்குர்ஆனிலிருந்து சில பக்கங்களை தமிழில் வாசித்து குடும்பத்தினருக்கு போதிப்பது, குடும்பத்துடன் அமர்ந்து பயான்கள் பார்ப்பது இந்த பழக்கங்கள் தான் நம்மை குடும்பத்துடன் சொர்க்கம் கொண்டு சேர்க்கும்.
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் அந்த பாக்கியத்தை நல்குவானாக...
📌 குடும்பத்தினரின் மார்க்க உறுதிக்காகவும், மறுமை வெற்றிக்காகவும் நபிமார்கள் செய்த பிரார்த்தனைகள் சில..
இப்றாஹிம் அலை செய்த பிரார்த்தனை
وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ رَبِّ ٱجْعَلْ هَـٰذَا ٱلْبَلَدَ ءَامِنًۭا وَٱجْنُبْنِى وَبَنِىَّ أَن نَّعْبُدَ ٱلْأَصْنَامَ
“என் இறைவனே! (மக்கா எனும்) இவ்வூரைப் பாதுகாப்பளிப்பதாக ஆக்குவாயாக! என்னையும் என் வழித்தோன்றல்களையும் சிலைகளை வணங்குவதை விட்டும் தூரமாக்குவாயாக!” என இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!
அல் குர்ஆன் - 14 : 35
رَّبَّنَآ إِنِّىٓ أَسْكَنتُ مِن ذُرِّيَّتِى بِوَادٍ غَيْرِ ذِى زَرْعٍ عِندَ بَيْتِكَ ٱلْمُحَرَّمِ رَبَّنَا لِيُقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ فَٱجْعَلْ أَفْـِٔدَةًۭ مِّنَ ٱلنَّاسِ تَهْوِىٓ إِلَيْهِمْ وَٱرْزُقْهُم مِّنَ ٱلثَّمَرَٰتِ لَعَلَّهُمْ يَشْكُرُونَ
எங்கள் இறைவனே! விவசாயமற்ற பள்ளத்தாக்கில் புனிதமான உனது ஆலயத்திற்கு அருகில் என் மக்களைக் குடியேறச் செய்துள்ளேன். எங்கள் இறைவனே! அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவதற்காக (இவ்வாறு செய்துள்ளேன்.) அவர்களை நோக்கி மனிதர்களின் உள்ளங்களைச் சாய்ந்திடச் செய்வாயாக! அவர்கள் நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளிப்பாயாக!
அல் குர்ஆன் - 14 : 37
رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ
என் இறைவனே! என்னையும், என் வழித்தோன்றல்களையும் தொழுகையை நிலைநிறுத்தக் கூடியவர்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் இறைவனே! எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக!
அல் குர்ஆன் - 14 : 40
رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ⭘
எங்கள் இறைவனே! விசாரணை நடக்கும் நாளில் என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளர்களையும் மன்னிப்பாயாக! (என்றும் இப்ராஹீம் பிரார்த்தித்தார்.)
அல் குர்ஆன் - 14 : 41
லூத் அலை செய்த பிரார்த்தனை
رَبِّ نَجِّنِى وَأَهْلِى مِمَّا يَعْمَلُونَ
“என் இறைவனே! இவர்கள் செய்வதை விட்டு, என்னையும் என் குடும்பத்தினரையும் காப்பாற்றுவாயாக!” (எனப் பிரார்த்தித்தார்.)
அல் குர்ஆன் - 26 : 169
நூஹ் அலை செய்த பிரார்த்தனை
رَّبِّ ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِمَن دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًۭا وَلِلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ وَلَا تَزِدِ ٱلظَّـٰلِمِينَ إِلَّا تَبَارًۢا
“என் இறைவனே! என்னையும், என் பெற்றோரையும், இறைநம்பிக்கையாளராக என் வீட்டிற்குள் நுழைந்தவர்களையும், இறைநம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகப்படுத்தி விடாதே!” (என்றும் இறைஞ்சினார்.)
அல் குர்ஆன் - 71 : 28
மூஸா அலை செய்த பிரார்த்தனை
قَالَ رَبِّ ٱغْفِرْ لِى وَلِأَخِى وَأَدْخِلْنَا فِى رَحْمَتِكَ ۖ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ
“என் இறைவனே! என்னையும் எனது சகோதரரையும் மன்னிப்பாயாக! உன்னுடைய அருளில் எங்களை நுழையச் செய்வாயாக! நீயே கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்!” என்று (மூஸா) கூறினார்.
அல் குர்ஆன் - 7 : 151
Comments
Post a Comment