இறைவேதம் கூறும் இஸ்லாமிய குடும்பம்
குடும்பத்துடன் சொர்க்கம் செல்வோரும், நரகம் செல்வோரும்..
وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ⭘ فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا⭘
யாருடைய ஏடு அவனது முதுகுக்குப் பின்புறமாக வழங்கப்படுகிறதோ, அவன் அழிவை வேண்டுவான்.
وَيَصْلَىٰ سَعِيرًا⭘ அவன் கொழுந்து விட்டெரியும் நரகத்தில் நுழைவான்.
إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا⭘
அவன், தனது குடும்பத்தாருடன் (உலகில்) மகிழ்ச்சியாக இருந்தான்.
إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ⭘
(இறைவனிடம்) அவன் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று எண்ணிக் கொண்டான்.
بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا⭘
அவ்வாறல்ல! அவனுடைய இறைவன், அவனைப் பார்ப்பவனாக இருந்தான்.
அல்குர்ஆன் - 84 : 10 - 15
📌 சிலரின் ஏடுகள் முதுகுக்கு பின்னாலிருந்து கொடுக்கப்பட்டு நரகில் எறியப்படுவதற்கு காரணம், அவர்கள் பூமியில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது.
குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வது குற்றமா என்றால் இல்லை. ஆனால் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு மட்டுமே குடும்பத்தை பயன்படுத்துவது குற்றம்.
அந்த மகிழ்ச்சி சிலரை மறுமையில் அல்லாஹ்வின் சந்திப்பை மறக்கும் அளவுக்கு துன்யாவில் மூழ்கடிக்கிறது. மறுமையில் இறைவனின் சந்திப்பை மறந்து வாழ்கிறார்கள்.
.
அதன் விளைவாக குடும்பத்தினர் செய்யும் பிழைகளை கண்டுகொள்ளாமல் இருப்பது மட்டுமின்றி அதற்கு சிலர் துணை நிற்கவும் செய்கிறார்கள்.
குடும்பத்துடன் சினிமாக்கள், சீரியல்கள் பொழுதுபோக்கு சுற்றுலாக்கள் என கேலிக்கைகளில் மூழ்குவதில் ஆர்வம் காட்டும் மனிதர்களில் பலர்,
குடும்பத்துடன் அல்குர்ஆனை தினசரி ஓதுவதிலும், மனனம் செய்வதில் அதில் போட்டிப் போடுவதிலும், குடும்பத்துடன் அல்குர்ஆன் மொழிபெயர்ப்புகளை வாசிப்பதிலும் ஹதீஸ்களை வாசிப்பதிலும், மார்க்க ரீதியாக கலந்துரையாடுவதிலும், மார்க்க உரைகளை வீடுகளில் குடும்பத்துடன் அமர்ந்து கேட்பதிலும் ஆர்வம் காட்டுவதில்லை...
.
சிறுசிறு பாவங்களை தங்களுக்குள் தடுத்துக் கொள்ளாமல் இருக்கின்ற போக்கு, ஒருகட்டத்தில் மது, வட்டி, மோசடி, போன்ற பெரும்பாவங்களில் தம் குடும்பத்தினர் ஈடுபட்டாலும் அதை தடுக்காமல் குடும்பத்தினரே துணை செல்ல துவங்குகின்றனர்.
.
இவர்கள் நிலையை குறித்து தான் அந்த வசனங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்தான் எனக் கூறுகிறது.
இவர்களின் இந்நிலைக்கு காரணம், உலகில் உபகாரம் செய்து கொள்வது மட்டுமே குடும்ப பொறுப்புகள் என மனிதர்கள் கருதுகிறார்கள்.
சம்பாதித்து போடுவது மட்டுமே தனது பொறுப்பு என குடும்ப தலைவர் கருதுகிறார். அவர் சம்பாதித்த செல்வத்தில் வாங்கிய தொலைகாட்சியும் செல்ஃபோனும் குடும்பத்தில் தவறான விடயங்களுக்காக பயன்படுத்தப்படுவது குறித்தும், வீணான செலவுகள் குறித்தும் விசாரிக்கப்படுவார் என்பதை அவர் சிந்திப்பதில்லை.
சமைத்து, துவைத்து வீட்டை தூய்மையாக பராமறித்துக் கொள்வது மட்டுமே தனது பொறுப்பு என குடும்ப தலைவிகள் கருதுகிறார்கள். தம் பொறுப்பின் கீழுள்ள குடும்ப உறுப்பினர்கள் தொழுகை ஓதுதலில் கவனம் எடுக்காமல் இருப்பது பற்றி இல்லத்தரசிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள் என கருதுகிறார்கள்.
சம்பாதித்து கொடுப்பதும், பராமறிப்பு பணிகளும், பொறுப்புகள் தாம். இதற்கும் விசாரணையும் கூலியும் உண்டு. ஆனால் இது தவிர்த்து மிக முக்கியமான பொறுப்பு குறித்து கீழுள்ள வசனங்கள் பேசுகிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
அல்குர்ஆன் 66:6
وَأْمُرْ أَهْلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصْطَبِرْ عَلَيْهَا ۖ
*(நபியே!) உமது குடும்பத்தினருக்குத் தொழுகையை ஏவுவீராக! அ(தைக் கடைப்பிடிப்ப)தில் பொறுமையை மேற்கொள்வீராக!*
அல்குர்ஆன் - 20 : 132
وَأَنذِرْ عَشِيرَتَكَ ٱلْأَقْرَبِينَ
(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக !
அல் குர்ஆன் - 26 : 214
📌 இறைவனின் இந்த கட்டளைகள் யாவும் ஒவ்வொரு குடும்ப தலைவர்களுக்கும், தலைவிகளுக்கும் சுமத்தப்பட்டுள்ள பொறுப்புகள் என்றே அவர்கள் உணரவில்லை..
.
எனவே உலக பொறுப்புகளிலும், உபரியான நேரங்களை வீணான பொழுது போக்கிலும் கழிக்கின்றனர்.
=========================
.
📌 துன்யாவில் வந்த நோக்கம் மறந்து இப்படியான துன்யாவுக்காக மட்டுமே வாழ்ந்து குடும்பத்துடன் நரகம் நுழைவதே நட்டத்திலேயே பெரும் நட்டம் என அல்குர்ஆன் கூறுகிறது.
قُلْ إِنَّ ٱلْخَـٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ⭘
நஷ்டப்பட்டோர் யாரெனில் தமக்கும், தம் குடும்பத்தினருக்கும் மறுமை நாளில் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள்தான். அறிந்து கொள்ளுங்கள்! இதுதான் தெளிவான நஷ்டமாகும்” என்றும் கூறுவீராக!
அல்குர்ஆன் 39:15
அல்லாஹ் நம்மையும் நம் குடும்பத்தினரையும் பாதுகாப்பானாக..
.
துன்யாவில் குடும்பத்தினருக்கு ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளுக்கே துடிதுடித்து போகின்றோம். அவர்களை மறுமையில் நரகத்திலிருந்து காக்க நாம் செய்த முயற்சிகள் என்னென்ன என்பதை ஒவ்வொரு குடும்ப பொறுப்பாளர்களும் இன்றே சிந்திப்போம்..
==========================
📌 குடும்பத்துடன் சொர்க்கம் நுழைபவர்கள்
جَنَّـٰتُ عَدْنٍۢ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ ءَابَآئِهِمْ وَأَزْوَٰجِهِمْ وَذُرِّيَّـٰتِهِمْ ۖ وَٱلْمَلَـٰٓئِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍۢ⭘ سَلَـٰمٌ عَلَيْكُم بِمَا صَبَرْتُمْ ۚ فَنِعْمَ عُقْبَى ٱلدَّارِ⭘
அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர், பிள்ளைகள் ஆகியோரில் நல்லோராக இருந்தவர்களும் நிலையான சொர்க்கங்களில் நுழைவார்கள். அவர்களிடம் வானவர்கள் அனைத்து வாசல்களிலிருந்தும் வருவார்கள். “நீங்கள் பொறுமையை மேற்கொண்டதால் உங்கள்மீது அமைதி ஏற்படட்டும்! மறுமையின் முடிவு நல்லதாகி விட்டது (என்று கூறுவார்கள்.)
அல் குர்ஆன் - 13 : 23,24
📌 பூமியில் உலக முன்னேற்றங்களில் மட்டுமே தொலைந்து விடாமல், இஸ்லாத்தை படிப்பதிலும், படிப்பினையுடன் அதற்கு செயல்வடிவம் கொடுப்பதிலும், ஆர்வமுடன் செயல்பட்டோர், அதில் ஏற்படும் சிரமங்களில் பொறுமை மேற்கொண்டோர் குடும்பத்துடன் சொர்க்கம் நுழைவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது..
==========================
இனிய இஸ்லாமிய குடும்பம் எப்படி இருந்தால் குடும்பத்துடன் சொர்க்கம் செல்ல அது வழிவகை செய்யும்..
இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவில்...
Comments
Post a Comment