சூனியத்தால் தாக்கம் உண்டா ?
சூனியத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது.சூனியக் காரர்கள் சில தந்திர வித்தைகளை காட்டி தனக்கு மந்திர வித்தைகள் தெரியும் என்று மக்களை ஏமாற்றி வருகின்றனர், புரட்டாசி இன்றி எங்கோ இருக்கும் ஒருவர் இன்னொருவனுக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது இஸ்லாமிய நம்பிக்கைக்கே மாற்றமானது என்பது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் எடுத்தியம்பி வருகிறோம்.. போதிலும் சூனியத்தை நம்பக்கூடியவர்கள் அதற்கு ஒரு புரட்டி வாதங்களை கற்பித்து மக்களை குழப்பி வருகின்றனர்...
أحمد – (ج 45 / ص 477)
26212 – حدثنا أبو جعفر السويدي قال حدثنا أبو الربيع سليمان بن عتبة الدمشقي قال سمعت يونس بن ميسرة عن أبي إدريس عائذ الله عن أبي الدرداء عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة عاق ولا مؤمن بسحر ولا مدمن خمر ولا مكذب بقدر
விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன் (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள்.
அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி),
நூல் : அஹ்மது (26212)
சூனியம் இல்லை என்பதற்கு இந்த நபிமொழியை நாம் சான்றாகக் காட்டினால்...
"அது இந்த ஹதீஸில் வரும் مؤمن بسحر என்ற வார்த்தை சூனியம் செய்பவனைத்தான் குறிக்கிறது.. முன்வைக்கின்றனர்..
முஃமின் பிஸிஹ்ர் என்ற வார்த்தையை விளங்கிக் கொள்ள ஒரு எளிமையான உதாரணம் கூறுகிறேன்.
"ஆமன்த்து பில்லாஹ்" என்ற வார்த்தையை சிறுவயதில் அதிகம் உச்சரித்து இருப்போம். "அல்லாஹ்வை நம்பினேன்" என்று பொருள்." ஆமன "அம்மன்" முஃமின் என்பதற்கு நம்பிக்கைக் கொண்டவன் என்பது பொருள் என்பதை அறிந்திருப்பீர்கள்.
ஆமன்த்து பில்லாஹ் - அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன் அல்லது முஃமின் பில்லாஹ் - அல்லாஹ்வை நம்பியவன் என்றால், அல்லாஹ் இருக்கிறான், அவனுக்கு அனைத்து ஆற்றலும் உள்ளது, என அல்லாஹ்வை குறித்த நம்பிக்கை அனைத்தும் அதில் அடங்கும்.
இப்போது முஃமின் பிஸிஹ்ர் என்றால் என்ன அர்த்தம் ???
முஃமின் பிஸிஹ்ர் சூனியத்தை நம்பியவன் என்றால் சூனியம் இருக்கிறது, அதற்குப் புறசாதனங்களின் தாக்கம் உண்டாகிறது என அவை குறித்த அனைத்து நம்பிக்கையும் அதில் அடங்கும் என்பதுதானே சரியான அர்த்தம். இத்தகைய நம்பிக்கை வந்தாலே அது வழிகேடு தானே.. பிறகென்ன சூனியம் செய்தால் தான் பாவம், நம்பினால் பாவமல்ல என்கிற வாதம்..!!
அல்லாஹ்வுக்கு இணையாக ஒருவன் அல்லது ஒன்று இருக்கிறது என நம்பினால் பாவமல்ல, இணைவைத்தால் தான் பாவம் என்று சொல்வதுபோல் உள்ளது உங்கள் வாதம்.
இப்போது யார் தவறான அர்த்தம் வைக்கிறார், யார் ஆதாரமின்றி தர்க்கத்தின் அடிப்படையில் போராடுகிறார் என புரிகிறதா ?
மேலும் ஒருப்பேச்சுக்கு இந்த ஹதீஸை இவர்களின் தவறான வாதப்படியே எடுத்துக் கொண்டாலும் சூனியம் பொய் வித்தை என்பதற்கு இதை மட்டுமே நாம் ஆதாரமாகக் காட்டவில்லையே.. இதைவிட தெளிவான இறைவசனங்கள் உள்ளனவே...
உதாரணத்திற்கு இரண்டைக் குறிப்பிடுகிறேன்.
சூனியம் இல்லை என்பதற்கு இந்த நபிமொழியை நாம் சான்றாகக் காட்டினால்...
"அது இந்த ஹதீஸில் வரும் مؤمن بسحر என்ற வார்த்தை சூனியம் செய்பவனைத்தான் குறிக்கிறது.. முன்வைக்கின்றனர்..
முஃமின் பிஸிஹ்ர் என்ற வார்த்தையை விளங்கிக் கொள்ள ஒரு எளிமையான உதாரணம் கூறுகிறேன்.
"ஆமன்த்து பில்லாஹ்" என்ற வார்த்தையை சிறுவயதில் அதிகம் உச்சரித்து இருப்போம். "அல்லாஹ்வை நம்பினேன்" என்று பொருள்." ஆமன "அம்மன்" முஃமின் என்பதற்கு நம்பிக்கைக் கொண்டவன் என்பது பொருள் என்பதை அறிந்திருப்பீர்கள்.
ஆமன்த்து பில்லாஹ் - அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டேன் அல்லது முஃமின் பில்லாஹ் - அல்லாஹ்வை நம்பியவன் என்றால், அல்லாஹ் இருக்கிறான், அவனுக்கு அனைத்து ஆற்றலும் உள்ளது, என அல்லாஹ்வை குறித்த நம்பிக்கை அனைத்தும் அதில் அடங்கும்.
இப்போது முஃமின் பிஸிஹ்ர் என்றால் என்ன அர்த்தம் ???
முஃமின் பிஸிஹ்ர் சூனியத்தை நம்பியவன் என்றால் சூனியம் இருக்கிறது, அதற்குப் புறசாதனங்களின் தாக்கம் உண்டாகிறது என அவை குறித்த அனைத்து நம்பிக்கையும் அதில் அடங்கும் என்பதுதானே சரியான அர்த்தம். இத்தகைய நம்பிக்கை வந்தாலே அது வழிகேடு தானே.. பிறகென்ன சூனியம் செய்தால் தான் பாவம், நம்பினால் பாவமல்ல என்கிற வாதம்..!!
அல்லாஹ்வுக்கு இணையாக ஒருவன் அல்லது ஒன்று இருக்கிறது என நம்பினால் பாவமல்ல, இணைவைத்தால் தான் பாவம் என்று சொல்வதுபோல் உள்ளது உங்கள் வாதம்.
இப்போது யார் தவறான அர்த்தம் வைக்கிறார், யார் ஆதாரமின்றி தர்க்கத்தின் அடிப்படையில் போராடுகிறார் என புரிகிறதா ?
மேலும் ஒருப்பேச்சுக்கு இந்த ஹதீஸை இவர்களின் தவறான வாதப்படியே எடுத்துக் கொண்டாலும் சூனியம் பொய் வித்தை என்பதற்கு இதை மட்டுமே நாம் ஆதாரமாகக் காட்டவில்லையே.. இதைவிட தெளிவான இறைவசனங்கள் உள்ளனவே...
உதாரணத்திற்கு இரண்டைக் குறிப்பிடுகிறேன்.
"மூசாவே! நீர் போடுகிறீரா? நாங்கள் முதலில் போடட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
[அல்குர்ஆன் 20:65]
"இல்லை! நீங்களே போடுங்கள்!" என்று அவர் கூறினார். உடனே அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது.
[அல்குர்ஆன் 20:66]
கவனிக்க.. கண்களை ஏமாற்றி கயிறுகளையும், தடிகளையும் சீறுவது போல் தோற்றமளிக்க செய்தார்களே தவிர, அற்புதம் செய்து கயிறுகளை உண்மையான பாம்பாக மாற்றவில்லை..
இறைக் கட்டளையால் கைத்தடியை உண்மையான பாம்பாக மாற்றியது மூஸா (அலை) அவர்கள் தான்..
கைத்தடியை உண்மையான பாம்பாக மாற்றிய மூஸா நபியின் செயல் அற்புதம். பாம்பாக மாறாமல் வெறும் கயிற்றுக்கு உயிருள்ளது போல் மக்களின் கண்களை ஏமாற்றும் பொய்யான தந்திரங்களால் நெலிய செய்ததே சூனியக்காரர்கள் செய்த சூனியம். அதாவது மேஜிக் ஆகும்.
அற்புதத்திற்கும், கண்கட்டி வித்தைக்கு உள்ள வேறுபாடு இதுதான்.
ஆக மூஸா (அலை) கால சூனியக்காரர்கள் மக்களின் கண்களை சில தந்திரங்களால் ஏமாற்றி கண்கட்டி (மேஜிக் ) வித்தை செய்தார்கள் என்றுதான் அல்குர்ஆன் கூறுகிறதே தவிர, உண்மையான அற்புதம் செய்ததாக எங்கும் கூறவில்லை...
சூனியத்திற்கு அல்குர்ஆன் கூறும் வடிவம் இதுதான் என்பதை புரிந்து கொண்டால், நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாக வரக்கூடிய அனைத்து நபிமொழிகளும் அல்குர்ஆனுக்கு முரணானவை, பொய்யானவை என்பது உறுதியாகிவிடும்..
ஆனால் இன்றுள்ள மக்களோ, சூனியத்திற்கு அல்குர்ஆன் கூறும் இந்த அளவுகோலை எடுக்காமல் நடைமுறையில் சூனியக்காரர்கள் எனும் போர்வையில் மக்களை ஏமாற்றும் ஏமாற்று பேர்வழிகள் சொல்லும் பொய்களை சூனியம் என நம்பி பயான் மேடையில் பேசுவதால் தான், இதுபோன்ற பொய்யான முரண்பட்ட பேச்சுக்கள் வருகின்றன..
மார்க்க அறிஞர்களின் பேச்சைக் கேட்டால் இப்படித்தான் அல்குர்ஆனுக்கு ஆளுக்கொரு விளக்கம் சொல்லி குழப்பி விடுவார்கள்..
அல்குர்ஆனுக்கு அல்லாஹ்வும் ரசூலும் கொடுத்திருக்கும் விளக்கங்கள் மட்டுமே ஒருமித்த கருத்தாக இருக்கும்.. அதுவே சத்தியமாகும்..
திருக்குர்ஆன் 39:9
.
Comments
Post a Comment